ஹரின் மற்றும் மனுஷா தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த முடிவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இன்றையதினம் அமைச்சவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹரீன் சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும் மனுஷ நாணயக்கார தொழில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவியேற்றனர்.

இந்நிலையில் இன்று அமைச்சரவையில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவை பதவிகளை ஏற்க கட்சியின் ஆதரவு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *