நான் மக்களுடன் யுத்தம் செய்ய வரவில்லை – அலி சப்ரி

தான் மக்களுடன் யுத்தம் செய்ய வரவில்லை என்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடவே வந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நெருக்கடியை உருவாக்கி ஒருவரையொருவர் நோக்கி விரலை நீட்ட முயற்சித்தால் அந்த விரலை வெற்றி வரலாறு வரை நீட்ட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் செய்ய வேண்டியது, ஒருவரையொருவர் விமர்சித்துக்கொள்வதை விடுத்து, நாட்டின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களாக பதவியேற்கும் முன்னர் 42 மில்லியன் ரூபாயை அரசாங்கத்திற்கு வருமான வரியாக செலுத்தியதாக தெரிவித்த அவர், பொதுப் பணத்தை ஒருபோதும் அபகரிக்கவோ அல்லது திருடவோ செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *