ரணிலுடன் இணைந்தமை குறித்து அமைச்சுப் பதவியைப் பெற்ற ஹரீன் விளக்கம்!

<!–

ரணிலுடன் இணைந்தமை குறித்து அமைச்சுப் பதவியைப் பெற்ற ஹரீன் விளக்கம்! – Athavan News

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 19ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக உறுதியளித்தமையாலேயே அவருடன் இணைந்தோம் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தாம் எடுத்த விசேட தீர்மானம் மற்றும் எதிர்வரும் நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தினர். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதில் தற்போதும் எந்தவொரு மாற்றமும் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *