
கடந்த சில மாதங்களாக நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதேவளை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அந்தவகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐ.ஓ.சி ஷெட்களில் உள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மட்டுமே பெற்றோல் நேரடியாக விநியோகிக்கப்படும்.
லங்கா ஐஓசி ஷெட்களில் இருந்து கேன்கள், கொள்கலன்கள் அல்லது பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை அனுமதிக்கப்படாது” என்று லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் (எல்ஐஓசி) தெரிவித்துள்ளது.

