
கொழும்பு, மே 20
கடந்த 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறையில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், இந்த கோரிக்கையை விடுத்தார்.
கொலை, ஆணவக் கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி அரசியல் பாகுபாடின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அவ்வாறு செயற்படாவிட்டால் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகம் சீர்குலைந்துவிடும்.
வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் அரசியல் நோக்கத்துடன் வன்முறைச் செயல்களை வழிநடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் தாக்கத்திற்குப் பின்னர் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் என இரண்டு குழுக்கள் உள்ளன.
தாக்குதலுக்கு ஆளான இளைஞர்கள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும். தாக்குதல் மற்றும் தீ வைப்புச் சம்பவங்களை வழிநடத்தியவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.