வன்முறை சம்பவங்கள்; கட்சி அரசியல் பாகுபாடின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்! – நாமல்

கோட்டா கோ கம மீதான தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தாங்கள் ஒதுங்கவில்லை என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விசாரணைகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றுஉரையாற்றிய அவர்,

“சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெயரிடப்பட்ட அனைவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கோரப்பட்டவாறு சரணடைந்துள்ளனர் என்பதுடன், வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.

கொலை, ஆணவக் கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி அரசியல் பாகுபாடின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அவ்வாறு செயற்படாவிட்டால் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகம் சீர்குலைந்துவிடும்.

வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் அரசியல் நோக்கத்துடன் வன்முறைச் செயல்களை வழிநடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் தாக்கத்திற்குப் பின்னர் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் என இரண்டு குழுக்கள் உள்ளன.

தாக்குதலுக்கு ஆளான இளைஞர்கள் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும். தாக்குதல் மற்றும் தீ வைப்புச் சம்பவங்களை வழிநடத்தியவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *