அதிக விலைக்கு விற்பனை எரிபொருள் விற்பனை;ஒருவர் கைது!

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுக்கு மத்தியில் சில இடங்களில் அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுவரும் சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் புத்தளம் – தில்லையடி பகுதியில் பெண் ஒருவரின் வீட்டில் ஒரு லீற்றர் 600 ரூபாவிற்கு பெற்றோல் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து நேற்றிரவு பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.

குறித்த சோதனையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கைப்பற்றப்பட்ட 18 லீற்றர் டீசல் மற்றும் 9 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டதோடு எரிபொருளை விற்பனை செய்த பெண்ணையும் போலீஸார் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *