நீர்வெட்டு தொடர்பில் விசேட அறிவித்தல்!

நீர்வெட்டு தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அந்தவகையில் கொழும்பின் 12, 13, 14, & 15 பகுதிகளுக்கு இன்று(21) இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (22) காலை 8 மணி வரை 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு 1 & 11 குறைந்த அழுத்த விநியோகத்தின் கீழ் நீர் பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *