கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.!

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள ஆறாவது நபரை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் பாறைச்சரிவினால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர்.

இதில் இருவர் உயிருடனும் மூவர் சடலமாகவும் மீட்கப்பட்ட நிலையில் ஆறாவது நபரை மீட்கும் பணி கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வருகிறது.

ஆறாவது நபர் சிக்கியிருப்பதாக கருதப்படும் லொறிக்கு மேல் பாறைகள் இருப்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் ஆறாவது நபரை மீட்க விரைவில் மீட்புப்பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *