தொடரும் எரிபொருளுக்கான நீண்ட வரிசை!

நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் எரிபொருட்களை பெறுவதற்கான மிக நீண்ட வரிசை தொடர்கின்றது.

திருகோணமலை 5ம் கட்டை சர்தாபுர பகுதியில் நேற்று மாலை பெற்றோல், குறித்த எரிபொருள் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்றது.

முச்சக்கர வண்டி ஒரு வரிசை, மோட்டார் சைக்கிள் பல வரிசை, கார் வண்டி ஒரு வரிசை என வீதியின் அருகே பல தூரம் நீண்டு சென்றது.

10 மணி தொடக்கம் பலர் காத்திருந்து ஏமாற்றம் அடைந்த நிலையில், பெற்றோல் பவுசர் வாகனம் மாலை 3.15 க்கே அவ் விடத்துக்கு வந்து இறக்கி விட்டு சென்றது.

ஆனாலும் கேன்களில் பெற்றோலை நிரப்ப 200 நபர்களுக்கு துண்டு (டோக்கன்) வழங்கப்பட்டுள்ளதுடன், ஐந்து லீற்றர் எனவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோக நடவடிக்கைகள் இடம்பெற்றன.

பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *