
நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். மகிந்த அமரவீரவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி கிடைக்கும் என தெரியவருகிறது.
ஏனைய நான்கு பேரில் மூன்று பேருக்கு ராஜாங்க அமைச்சு பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்த போதிலும் பதவிகளை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்திருந்தது.
இவ்வாறான நிலையிலேயே அந்த கட்சியை சேர்ந்த மேலும் ஐந்து பேர் அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.