இன்று கொழும்பு, கோட்டையில் HND மாணவர்கள் எதிர்ப்பு பேரணியை நடத்துவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோட்டைப் பொலிஸ் பிரிவில் உள்ள எந்தவொரு அரச அல்லது உத்தியோகபூர்வ நிறுவனங்கள் அல்லது கட்டிடங்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைவதையோ அல்லது சேதப்படுத்துவதையோ தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.