
அரசாங்கம் என்ற வகையில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டாலும், மின்வெட்டு நேரத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை மாத்திரம் பெற்றுக்கொள்ளுமாறும், எரிபொருளை வீடுகளில் சேமித்து வைத்துக்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.