அவுஸ்ரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் படகுகள்; தடுத்து நிறுத்த உத்தரவு!

அவுஸ்ரேலியாவில் தற்போது சூடுபிடித்து வரும் தேர்தல் காரணமாக சட்டவிரோத படகுகளில் அவுஸ்ரேலியாவிற்குள் நுழைய முயலும் படகுகள் தடுத்து நிறுத்தப்படுவதுடன் அவை திருப்பி அனுப்பப்படும் என தற்போதைய பிரதமர் மொரிஸ் ஜோன்சன் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் பிரதமர் ஜோன்சன் மீது ‘எல்லைப் பகுதிகள் பலப்படுத்தப்படவில்லை என்றும், படகுகளில் உள்நுழைவோர் தொடர்பாக உரிய சட்ட முறைமைகள் கையாளப்படவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை எல்லை பகுதிகளை மிகவும் பலப்படுத்துமாறும், சட்ட விரோத படகுகள் மற்றும் எல்லைகளை கடப்போர் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பு அமைச்சிற்கும், அவுஸ்ரேலிய இராணுவத்திற்கும் பிரதமர் ஜோன்சன் கட்டளை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறிப்பாக இலங்கையர்களின் சட்ட விரோத வரவு குறித்து எச்சரிப்புடன் இருக்குமாறும், சட்ட விரோத வரவுகள் திருப்பி அனுப்பப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

  

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *