மட்டக்களப்பு,மே 21
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் திடீரென மோட்டார் வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் சனிக்கிழமை (21) காலை 11.00 மணியளவில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் வண்டியொன்று திடீர் என தீப்பற்றி எரிந்ததுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது பொதுமக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போதிலும் குறித்த மோட்டார் சைக்கிள் முற்றுமுழுதாக தீயில் எரிந்து சேதமாகியுள்ளது.
பெற்றோல் கசிவினாலேயே குறித்த தீப்பற்றல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


