கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களையடுத்து ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நேற்றிரவுடன் நீக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் இராணுவம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இதேவேளை குறித்த வர்த்தமானி பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் (அத்தியாயம் 40) வெளியிடப்பட்டுள்ளது. பொது அமைதியை பேணுவதற்கு ஆயுதப்படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் ஜனாதிபதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

