கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு மயானத்தில் நடைபெற்ற சிரமதானப்பணி!
-புவி-
கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் இன்று டெங்கு ஒழிப்பு சிரமதானம் இடம்பெற்றது.
வடக்கு சுகாதார பணிமனை பணிப்பாளர் டொக்டர் என்.ரமேஷ் அவர்களின் வழிகாட்டளில் கிராம அபிவிருத்தி சங்கங்கள்,மகளிர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் பொதுமக்கள் எனப்பலரும் ஒன்றிணைந்து பாண்டிருப்பு மயானத்தில் இந்த டெங்கு ஒழிப்பு சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டன.





