எரிபொருள் பவுஸர் மீது தாக்குதல் – சுன்னாகத்தில் இருவர் கைது

சுன்னாகத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத் திரும்பிய பவுஸர் மீதும், சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி சந்தேகத்தில் 26 வயதான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்து மாலை இடம்பெற்றுள்ளது.

அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தனரென சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *