நாட்டிற்கு எவ்வகையிலும் சேவையாற்றத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில், கரு ஜெயசூரியவிடம் சமீபத்தைய பிரதமர் பதவி மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த முன்னாள் சபாநாயகர், தற்போது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆகையினால் முந்தைய அரசாங்கத்தினால் ஏற்பட்டுள்ள குழப்பங்களை முறையாக களைய வேண்டுமென அவர் தெரிவித்தார்.
கௌரவமான அரசியல்வாதிகள் இலங்கையில் இல்லை எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

