தனியார்…

தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்!

-புவி-

கல்முனை வடக்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் என் ரமேஸ் அவர்களினால் மக்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்.

குறிப்பாக பெரிய நீலாவணை தொடக்கம் கல்முனை வடக்கு பொது சுகாதார வைத்திய அதிகாரியின் நிர்வாக எல்லைக்குட்பட்ட கிராமங்களில் டெங்கு கூடுதலாக பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

தனியார் வகுப்புகள் நடைபெறும் (ரியூட்டரிகள்)இடங்களிலிருந்தே தொற்று பரவுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே ஆகவே குறித்த இடங்களை துப்பரவு செய்து வைத்திருக்க தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *