இலங்கையி்ல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளாந்தம் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் கொலன்னாவை பிரதேசத்தில் பேக்கரியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 எரிவாயு சிலிண்டர்களை கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.
வர்த்தகர் சந்தையில் நிலவும் விலையை விட இரட்டிப்பான விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.