இன்றைய தினம் 02 மணிநேரம் 10 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அத்தோடு, 29ஆம் திகதி மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் மாலை 6.30 மணிக்குப் பின்னர் எவ்வித மின்வெட்டுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
