வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமனம்

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பதவியை தக்கவைத்துக் கொள்ள அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மேற்கொண்ட இறுதிநேர முயற்சியும் தோல்வியடைந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதற்கான முன்மொழிவை செய்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அருணி விஜேவர்த்தன வெளிநாட்டு சேவையில் பணியாற்றிய மூத்த அதிகாரி என்பதும் அந்த சேவையில் இருந்து முன்கூட்டியே ஓய்வுப் பெற்றுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *