
பத்து புதிய அமைச்சர்கள் இன்றைய தினம் அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ள அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளாவிட்டால் நாளை மறுதினம் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஐந்து அமைச்சுப் பதவிகளும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும், ஏனைய தரப்பினருக்கு மூன்று அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட உள்ளத்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

