தொடரும் நெருக்கடி நிலை; அறுவைச் சிகிச்சைகளும் பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவ துறையும் கடும் பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதேவேளை சில மருத்துவமனைகளில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு தேவையான தையல் நூல் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார கூறியுள்ளார் .

அதேவேளை நோயாளிகள் மற்றும் அன்பளிப்பாளர்களின் உதவிகளுடனேயே தற் போது நாட்டில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கும் சேவைகளை முன் னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *