குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்!

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ள எவரும் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சமீபத்திய அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் கூறுகிறது.

பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகத்தின் அறிவுரை, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுடன் நேரடியாகவோ அல்லது வீட்டுத் தொடர்பு கொண்டோருக்குப் இது பொருந்தும்.

தொடர்புகளைக் கண்டறிவதற்கான விபரங்களை வழங்கவும், பயணத்தைத் தவிர்க்கவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் தொடர்பைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா இதுவரை 20 வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் மற்றும் அவுஸ்ரேலியா முழுவதும் 80க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *