மேலும் புதிய 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம்

மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (23) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
முன்னதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு மேலதிகமாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் செயற்படவுள்ளனர்.

புதிய அமைச்சர்கள் விவரம் வருமாறு:

டக்ளஸ் தேவானந்தா- மீன்பிடி
பந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகங்கள்
கெஹலிய ரம்புக்வெல்ல – நீர் வழங்கல்
மஹிந்த அமரவீர – விவசாயம் மற்றும் வன வளங்கள் மற்றும் வனவிலங்குகள்
ரமேஷ் பத்திரன – தொழில்கள்
விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசனம், மதம் மற்றும் கலாச்சார விவகாரங்கள்
அஹமட் நசீர் – சுற்றுச்சூழல்
ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசனம் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

முன்பு நியமிக்கப்பட்ட அமைச்சர்கள்:

நிமல் சிறிபால: துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து
கெஹலிய ரம்புக்வெல்ல: ஆரோக்கியம்
ரமேஷ் பத்திரன : தோட்டம்
சுசில் பிரேமஜயந்த – கல்வி
விஜேதாச ராஜபக்ச – நீதி அமைச்சர்
திரான் அலஸ் – – பொது பாதுகாப்பு
ஹரின் பெர்னாண்டோ -– சுற்றுலா மற்றும் நிலம்
மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
நளின் பெர்னாண்டோ – வர்த்தகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *