
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணிக்குழாமினருக்கு, சலுகை அடிப்படையில் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
இன்றைய தினம் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமான நிலையில், குறித்த பரீட்சை கடமைகளுக்கு செல்லும் பணிக்குழாமினருக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், அது முறையாக செயற்படுத்தப்படாமையினால் ஆசிரியர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.