புதிய அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்! – கரு வலியுறுத்து

நாட்டில் 19 பிளஸ் புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தாமதமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகரும் நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

19 பிளஸ் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.

அரசியல் தேவைகளின் அடிப்படையில், திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவது தடுக்கப்படுமாயின் அதனை தடுத்தவர்கள் விரைவில் அம்பலமாவார்கள்.

அவர்களின் தவறு உறுதிப்படுத்தப்படும். மக்கள் ஒன்றுகூடி அவர்கள் காட்டிய பலத்தை கவனத்தில் கொள்ளாமல் புறந்தள்ள முடியாது எனவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

உத்தேச 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாகவே கரு ஜயசூரிய இந்த டுவிட்டை செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *