21வது திருத்தத்தை அவசரமாக கொண்டு வருவது பாரிய தவறாகும்! – ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

நாட்டில் தற்போது நிலவிவரும் அமைதியற்ற சூழ்நிலையில் மக்களின் கருத்தை அறிந்துகொள்ளாது 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றில் உடனடியாக கொண்டுவரப்படவுள்ளமை பாரிய தவறாகும் என ‍தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 21 ஆவது மற்றும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தங்களை இரு வேறு பிரிவினர்களால் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலங்களை வர்த்தமானியில் உள்ளடக்கி பாராளுமன்றின் ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டு இந்த இரண்டு சட்ட மூலங்களின் ஏதேனும் ஒன்றை பாராளுமன்றில் விவாதத்திற்கு கொண்டு வர முடியும். அத்துடன், இந்த இரண்டு சட்ட மூலங்கள் அல்லாத புதிய சட்ட மூலம் ஒன்றை அரசாங்கத்தினால் கொண்டு வர முடியும்.

ஆகவே, இந்த தெளிவற்ற தன்மை காரணமாக குறித்த சட்ட மூலங்களானது நீதிமன்ற சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை எனில், மக்கள் ஆணை இல்லாமல் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முடியும். இது பாரிய ஜனநாயக அச்சுறுத்தலாக அமையும்.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டமையே அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு பிரதான காரணமாகும். ஆகவே, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாமல் அரசியல் நெருக்கடியை தீர்க்க முடியாது. நாட்டில் இந்த இரண்டு நெருக்கடிகளை தீர்ப்பதற்கு எமது அமைப்பினால் ஆறு யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

அவை கீழே தரப்படுகிறது.

1.நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்த்து ஒழுக்கமான அரசியல் கலாச்சாரமொன்று அமையும் வரையில், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நடவடிக்கைகளை தாமதப்படுத்தல்.

  1. மேலே கூறப்பட்ட காலம் அமையும் வரையில், அரசிலமைப்பு திருத்தம் நடைபெறும்போது, வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தனிநபர் சட்ட மூலங்களை பாராளுமன்ற செயற்குழுவின் ஊடாக திருத்தம் செய்வதை விடுத்து, அரசாங்கத்தினால் புதியதொரு சட்டமூலத்தை வர்த்தமானியில் உள்ளடக்கி பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும். எனினும், அதற்கு முன்னதாக மக்கள் கருத்தை பெறுவதற்கான குறிப்பிடத்தக்க கால அளவை வழங்கப்பட வேண்டும்.
  2. வர்த்தமானியில் இடம்பெறும் சட்ட மூலத்தில் உள்ளடங்குகின்ற திருத்தங்கள் மற்றும் நீதிமன்றத்தினால் இணக்கம் தெரிவிக்கப்பட்ட திருத்தங்கள் தவிர்ந்த வேறேந்தவொரு திருத்தங்களும் பாராளுமன்ற செயற்குழு கூட்டத்தின்போது உள்ளடக்கப்பட மாட்டாது என்பது குறித்த உறுதி சகல பிரிவினராலும் வழங்கப்பட வேண்டும்.

4.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில், அரசியலமைப்பு திருத்தங்களின்போது பல்வேறு தந்திரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இரண்டாம் தர அரசியலமைப்பு திருத்தமொன்றை மக்கள் ஆணைக்கு முன்வைக்கப்படும் என்பதை குறித்த சட்ட மூலம் மீதான முதலாம் வாசிப்பின்போது பாராளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

  1. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் அதிகாரம் தொடர்பில் ஏதேனுமொரு குளறுபடிகளை தோற்றுவிப்பதன் ஊடாக அரசாங்கத்‍தை வலுவிலக்கச் செய்ய இடமளிக்கக் கூடாது. அவ்வாறு ஜனாதிபதி அல்லது பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படும் திருத்தங்கள் கொண்டுவரப்படும் சந்தர்ப்பத்தின்போது, கட்டாயமாக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு ரீதியான அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும்.
  2. ஜனாதிபதித் தேர்தலின்போது உங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணையின்படி, நீங்கள் புதிய அரசியலமைபு உருவாக்கம் ஒன்றை செய்ய வேண்டுமே தவிர, அரசியலமைப்பு திருத்தத்தை அல்ல. இதன்படி, பல்வேறு பிரிவினர்களின் மறைமுக தேவைகளுக்கு அமைவாக முன்வைக்கப்படும் அரசியலமைப்பு திருத்தங்களை ஏற்றுக்கொள்ளாது, அதற்கு பதிலாக புதிய அரசியமைப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.- என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *