கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் சிங்கம் ஒன்று பராமாரிப்பாளரின் விரலை கடித்துக் குதறியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கூண்டுக்குள் இருந்த சிங்கத்தை, பராமரிப்பாளர் விளையாட்டாக தொட முயன்றபோது சிங்கம் அவரைப்பார்த்து உறுமியப்படி இருந்தது.

ஆனாலும் அவர் தொடர்ந்தும் சிங்கத்தை தொட்டு விளையாடியபடி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கம் அவரது விரலைக் கடித்துக் குதறியது.
குறித்த பராமரிப்பாளர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கம் அவரது விரலைக் கடித்துக் குதறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.