
குரங்கு அம்மை தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தாக்கும் அபாயம் அதிகமென வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் பயன்பாட்டில் இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியரான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
நோய் பாதுகாப்பு இந்த வைரஸின் தற்போதைய மாறுபாடு தீவிரமற்ற மாறுபாடாகும் என பேராசிரியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான தற்போதைய சுகாதார நடவடிக்கைகள் குரங்கு அம்மை தொற்றிலிருந்தும் பாதுகாப்பதற்கான முக்கியமான நடைமுறையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்குள் நுழைகிறதா குரங்கு காய்ச்சல்?தற்போது பல நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பில் இலங்கை வைத்தியசாலை அமைப்பு மற்றும் வைத்தியர்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.தொற்றுநோய் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் இலங்கைக்கு வரும் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளை அடையாளம் காண விமான நிலையத்தில் தயார்படுத்தல் செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே சுட்டிக்காட்டியுள்ளார்.