
அரசாங்க நிதி தொடர்பான குழுவில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் இன்று முன்னிலையாவுள்ளனர்.
அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், முன்னிலையாகவுள்ளனர்.
நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அரசாங்க நிதி பற்றிய குழுவில் இன்று காலை 10 மணிக்கு முன்னிலையாகுமாறு இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடும் வகையில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளாக அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது.
மேலும், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் முன்னிலையாகுமாறு இலங்கை வங்கிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை வங்கியின் கணக்காய்வு அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை குறித்து ஆராயும் நோக்கில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.