
ரஷ்ய உக்ரைன் போர்க்களத்தில் இருந்து தப்பியோடிய ரஷ்ய போர் வீரர் ஒருவர் தனது இராணுவ விலகல் கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்தது மட்டுமன்றி ரஷ்யாவின் போர் மீறல்களையும் எழுத்து மூலம் ஐக்கிய நாடுகள் சபையிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
41வயதான ரஷ்ய கொமாண்டோ போர் வீரரான பொரிஸ் பொன்டாரேவ் தனது பதவி விலகல் கடிதத்தையும் அதனுடன் போர் விடயங்கள் குறித்த மற்றுமொரு கடிதத்தையும் சுவிட்ஸ்லாந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையிடம் ஐநா பிரதிநிதிகள் மூலம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொரிஸ் பொன்டாரேவ் பதவி விலகல் கடிதத்தில்,
“தனது இருபது வருட இராணுவ வாழ்வில் பல வெளிநாட்டு இராணுவ படையெடுப்புக்களை பார்த்திருக்கின்றேன். ஆனால் ரஷ்ய அதிபர் புடினால் உக்ரைன் மீது கடந்த மாசி 24ம் திகதி மேற்கொள்ளப்பட்ட, தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு போரை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை.
அவ்வளவு கொடூரமான ஆக்கிரமிப்பாகவும், மனிதாபிமானமற்ற ஒரு வன்மையான செயலை புடின் உக்ரைன் மீது மேற்கொண்டிக்கின்றார். இது உக்ரைன் மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல மாறாக ரஷ்ய மக்களையும் மிகுந்த துன்ப துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே இந்த போர் முனைப்புக்களில் சிக்கியிருக்கும் உயிர்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்ட மேற்படி இராணு வீரர் “தான் ஒரு பொறுப்புள்ள பொதுமகன் என்ற வகையிலே இந்த விடயத்தை எடுத்துக் கூறுவதாகவும் மற்றப்படி தனக்கு இது தேவையற்ற ஒரு விடயம்” எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ வீரர்கள் தமது இராஐனிமா கடிதங்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பு என்பது மிகவும் அரிதாகவே நடைபெறும் சம்பவம் என குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் இராஐதந்திர ஆலோசகர் ஜெனடி கடில்லோவ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.