ஈரானில் கட்டி முடிக்கப்படாத கட்டடம் இடிந்து விழுந்ததில் 10பேர் உயிரிழப்பு!

தென்மேற்கு ஈரானில் கட்டி முடிக்கப்படாத கட்டடம் இடிந்து விழுந்ததில், 10பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் டசன் கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அபாதானில் உள்ள 10 மாடிகள் கொண்ட மெட்ரோபோல் அலுவலகத் தொகுதியின் இடிபாடுகளில் இருந்து 35 பேரை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

கீழே உள்ள வீதியில் கான்கிரீட் தளங்களும் இரும்புக் கற்றைகளும் விழுந்து பல கார்களை நசுக்கியதை படங்கள் காட்டுகின்றன.

சரிவுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரோபோலின் உரிமையாளர் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் இருவரும் கைது செய்யப்பட்டதாக உள்ளூர் வழக்கறிஞர் ஹமித் மரனிபூர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *