நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டங்களும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
இருப்பினும் நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
மக்களின் போராட்டத்தில் 21வது குறைந்தபட்ச கோரிக்கையுடன் அரசியலமைப்பு திருத்தம் உடனடியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் தற்போதைய அரசு நிச்சயமாக நம்பிக்கை இழக்கும். விலகிச் செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என அதில் பதிவிட்டுள்ளார்.
