யாழில் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் தலைவர் ஆறு.திருமுருகனின் 61வது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபையின் ஏற்பாட்டில் இளைய தலைமுறை ஆற்றல் விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை9 மணிக்கு தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வளாகத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஆறு.திருமுருகனின் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் . சி.சிறி சற்குணராஜா , தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ , யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேரா சிரியர் மருத்துவ நிபுணர் . இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் வாழ்த்துரைகள் ஆற்ற வுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *