இலங்கை – IMF பேச்சுவார்த்தை இன்றுடன் நிறைவு!

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பான தொழில்நுட்ப பேச்சுவார்த்தை இன்று நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளை சர்வதேச நாணய நிதியம் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளரான ஜெரி ரைஸ் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

IMF கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு உதவுவதற்கும், எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு சரியான நேரத்தில் தீர்வு காண்பதற்கு ஆதரவாக பங்குதாரர்களுடன் ஈடுபடுவதற்கும் அவர்கள் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *