உலக சுகாதார ஸ்தாபன உதவியின் கீழ் 2 மில்லியன் அமெ. டொலர்!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் அலகா சிங் இன்று கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இலங்கையின் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க அமைப்பின் பூரண ஆதரவை உறுதியளித்தார்.

இந்த சந்திப்பு இன்று காலை அலரிமாளகையில் இடம்பெற்றுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மருந்துப் பற்றாக்குறையை தீர்க்க முடியும் என்று தான் நம்புவதாக வைத்தியர் அலகா தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை மேம்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி பூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவித் திட்டத்தின் முதல் கட்டமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெறும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் அலகா சிங் அறிவித்துள்ளார்.

இதேவேளை, மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்மொழிவதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் தலைவர் ருவான் விஜேவர்தன, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *