மனோ அணியுடன் முன்னிலை சோசலிச கட்சி கலந்துரையாடல்!

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு மத்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதுடன் புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கான நியமனங்களும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் இன்றையதினம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், முன்னிலை சோசலிச கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று கொழும்பில் மனோ கணேசன் இல்லத்தில் இடம்பெற்றது.

குறித்த பேச்சுவார்த்தையில் த.மு.கூ தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் திகாம்பரம், பொதுசெயலாளர் சந்திரா சாப்டர், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரட்ன மற்றும் முன்னிலை சோசலிச கட்சியின் சார்பில் புபுது ஜாகோட, சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *