
நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இவ்வாறான நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னால் எரிபொருளை பெற நீண்ட வரிசையில் வாகன சாரதிகள் காத்துநிற்கின்றனர்.
இவ்வாறான நிலையில் மீரிகம பஸ்யால வீதியின் மல்லேஹெவ சந்திக்கு அருகில் வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து காரில் பொருத்தப்பட்டிருந்த பெற்றோல் குழாயை வெட்டியெடுத்து பெற்றோல் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை தனிநபர் அல்லத குழுவொன்று இணைந்து காரில் பொருத்தப்பட்டிருந்த பெற்றோல் குழாயை வெட்டியுள்ளதாகவும்இ அப்போது அந்த காரில் சுமார் 50 லீற்றர் பெற்றோல் இருந்ததாகவும் காரின் உரிமையாளர் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.