
யாழில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக களவில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் , நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது , சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.