
வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பகிடிவதை சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி நேற்றிரவு கைது செய்யப்பட்ட 35 பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.