
கொழும்பு, மே 25:குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள திகதியையும், நேரத்தையும் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி 2022.05.17ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்துக்கொண்டு வருபவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் எனவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி,www.immigration.gov.lkஎன்ற இணையத்தள பக்கத்தின் ஊடாகவும் அல்லது 070 7101 060 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தியும் முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

