கொரிய மொழி பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு கொரிய மொழி பரீட்சைக்கு 31,378 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த பரீட்சைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பன்னிபிட்டிய கணினி நிலையத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுளதுடன் தினமும் 4 குழுக்கள் கணினி அடிப்படையிலான பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

2022 ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சை மே 23 திகதியன்று ஆரம்பமானது. பரீட்சை முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும் மற்றும் முதல் 7,000 விண்ணப்பதாரர்களின் முடிவுகள் ஜூலை 5 ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ளது.

கொரியா மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினால் தென் கொரியாவில் வேலை வாய்ப்புக்காக இலங்கையர்களை தேர்வு செய்யும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எவ்வித செல்வாக்கையும் செலுத்த முடியாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *