நாட்டில் கடுமையான போசாக்கு குறைபாடு ஏற்படும் அபாயம்! மருத்துவர்கள் எச்சரிக்கை

நாட்டில் கடுமையான போசாக்கு குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலையேற்றம் ஆகியனவற்றின் அடிப்படையில் நோக்குமிடத்து நாட்டில் கடுமையான போசாக்கு குறைப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், கர்ப்பிணி பெண்கள், தாய்பாலூட்டும் தாய்மார்கள், சிறு குழந்தைகள் சிறுவர்கள், மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தற்போதும் ஊட்டச்சத்து குறைப்பாடு அதிகரித்த போக்கு காணப்படுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு நாட்டில் மீண்டும் திரிபோசா சத்துணவினை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க சம்மேளன கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *