
கொழும்பு, மே 25: எதிர்கால அரசியல் இலக்குகளை அடைவதற்காக அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமான கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமான கட்சி தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

