கொழும்பில் பிரியாணிக்குள் எலிக்கறியா? -வெளியான உண்மை!(வீடியோ இணைப்பு)

கொழும்பு பெட்டாவில் இயங்கும் பிரபல ஹோட்டலில், கோழி இறைச்சி பிரியாணிக்கு பதிலாக எலி வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

குறித்த ஹோட்டலில் நபர் ஒருவர் கோழி இறைச்சி பிரியாணி வாங்கியுள்ளார்.

குறித்த உணவுப் பொதியை பிரித்து பார்த்த போது , கோழி இறைச்சிக்கு பதிலாக எலி போன்ற முக அமைப்புக்கு கொண்ட தலைக் கறி காணப்பட்டுள்ளது.

ஆகவே பிரியாணிக்கு , எலி இறைச்சி வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக சமூகம் மீடியா ஹோட்டல் உரிமையாளரை தொடர்புகொண்டு கேட்ட போது:

எமது ஹோட்டலில் முயல் கறியும் விற்கப்படுகிறது. நபர் ஒருவர் கோழி பிரியாணி ஓடர் செய்த போது தவறுதலாக முயல் தலை கறி அங்கே வைக்கப்பட்டுள்ளது.

அது எலிக்கறி இல்லை.கோழிக்கறிக்கு பதிலாக முயல் தலை கொடுத்தது எமது நிறுவனத்தின் தவறு.

அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு தலைக்கறி கொடுக்கும் வழக்கம் இல்லை.ஆகவே தலைக்கறி கொடுத்தது எமது தவறு.

குறித்த நபருக்கு வழங்கப்பட்ட பார்சலில் வைக்கப்பட்டது எலிக்கறியா,முயல் கறியா என ஆராய்வதற்கு சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுகாதார தரப்பின் பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்கு நாம் எமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம் என்றார்.

வீடியோ இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *