“ஒரே நாடு ஒரே சட்டம்” அறிக்கை ஜனாதிபதியிடம் அடுத்த வாரம் கையளிப்பு

கொழும்பு, மே 25

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் மூலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த தரவுகள் சேகரிக்கும் பணிகள் மற்றும் வாக்குமூலங்கள் என்பவற்றை ஆவணப்படுத்தும் பணிகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடத்தில் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடு பூராகவும் நாம் சென்று சகல மக்களின் கருத்துக்களையும் பதிவு செய்து தரவுகளை சேகரித்து அறிக்கையொன்றை தயாரித்துள்ளதாகவும், எமது அறிக்கை மிக பலமானது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் முழுமையான அறிக்கை தற்போதைய நாட்டின் நிலைமையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *