நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழ் மக்களின் பலம் அவசியம்!

வட மாகாணத்தில் வியாபாரம் நம்பிக்கை சுட்டெண் தொடர்பான ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழிலாளர்கள் துறை மன்றம் ஊடக சந்திப்பின் மூலம் அது பற்றிய விளக்கத்தினை தெரியப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக விக்னேஷ் கருத்து தெரிவிக்கையில் ;

இலங்கை ஒரு இக்கடடான சூழலில் தன்னுடைய அரச யந்திரத்தினை இயங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய பொறுப்பினை உணர்ந்து தேசத்தினுடைய மீட்ச்சிக்காக செயற்பட வேண்டிய தேவை உள்ளது .

வட மாகாணத்தில் தொழில்த்துறை வளர்ச்சிக்காக கணிசமான பங்களிப்பினை செய்து வருகிறோம். வியாபார நம்பிக்கை சுட்டெண் உலகளாவிய ரீதியில் தொழில்த்துறை வளர்ச்சிக்கு முக்கியமான முடிவுகளை மேற்கொள்ளுவதற்கு இந்த சுட்டெண்ணை பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகத்து.

அந்தவகையில் இலங்கையில் ஏனைய மாகாணங்களைத் தவிர்த்து வட மாகாணத்தில் இல்லாதிருப்பது தொழில்த்துறையினை முயற்சியை நகர்த்துவதற்கு ஒரு பிரச்சனையாக உள்ளது.

இதற்கமைய OAV என்ற ஜேர்மன் நிறுவனத்துடன் இணைந்து இந்த ”வியாபார நம்பிக்கை சுட்டெண்” என்கின்ற விடயத்தினை 2021 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான சுட்டெண்ணை கணக்கிட்டு இருக்கின்றோம் .இந்த ஆய்வு நிறைய விடயங்களை தெளிவாக வெளிப்படுத்தி இருக்கின்றது.

வட மாகாணம் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலும் அதாவது தெற்கில் இருந்து வருகின்ற பொருட்களுக்கு தடை தட்டுப்பாடுகள் நிலவுகின்ற பொழுதும் வட மாகாண முயற்சியாளர்கள் மனம் தளராமல் தங்களுடைய தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு 2 முக்கிய காரணங்கள் காணப்படுகின்றன.

1.விவசாயத்தில் 65% ஆனோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாய உற்பத்திகளில் கவனம் செலுத்துவதனால் கணிசமான அளவு தன்னிறைவு காணப்படுகிறது.

  1. மீன்பிடித்துறையில் 14 % க்கு மேலானோர் தங்கி இருப்பதனால் இந்த துறையும் கைகொடுக்கிறது.

இதற்கமைய 80 % ஆனோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த 2 துறைகளையும் சார்ந்தவர்களாக இருப்பதனால் சில அடிப்படை தொழில் முயற்சிகளை செய்வதன் ஊடாக முழுமையாக தன்னிறைவு பெற்ற மாகாணமாகவும் வட மாகாணம் காணப்படுகிறது.

மேலும் ,தொழில்த்துறையின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகும். வட மாகாணத்தின் இயக்கம் மிக சுமூகமான முறையில் இயங்குவதற்கு தொழில்த்துறை பாதிக்கப்படாமல் இருப்பது மிக முக்கியமாகும்.

தொழில்துறையினர் வட மாகாணத்தின் நிதி சார்ந்த துறைக்கு ஒரு உந்து சக்தியாக இருப்பவர்கள்.எனவே மின்சாரம்,எரிபொருளினை பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக சிறந்த முறையில் பயன்படுத்துவதால் இந்த நெருக்கடி சூழ்நிலையினை வெற்றிகொள்ளலாம்.

வளங்களை சரியான நேரத்தில் பாவிக்கப்படுவதை உறுதிப்படுத்துகின்ற பட்சத்தில் இந்த பிரச்சினையை வெற்றி கொள்ளலாம்.

வட மாகாணத்தின் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒரு மிகாப்பெரிய பலமாகும்.இந்த பலத்தினை சரியான தருணத்தில் அவர்களின் சக்தியினை பயன்படுத்துகிற பொழுது நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான ஏதுவாக வழிவகைக்கும்.

எனவே அரசியல்வாதிகள், கல்விமான்கள் வியாபார தொழில்த்துறையினர் ,அரசாங்க உத்தியோகத்தர்கள் என அனைத்து பிரிவினரும் ஒன்று சேர்ந்து இந்த பிராந்தியத்தின் மீழ்ச்சிக்காக வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம்.

சமூக பொறுப்புணர்வுடன் செயற்படுகின்ற பொழுது ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வட மாகாணம் இந்த பிரச்சனைகளை வெற்றிகொள்ள முடியும் என்பது யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில்த் துறையின் நம்பிக்கையாக இருக்கிறது. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *